துரோகம்
..................................
ஆள்கின்ற நினைப்போடு நங்கூரம் இட்டு
ஆசை என்ற சொல்லை காட்டி
அன்பால் என்னை மயக்கி விட்டு
அழகான காதலிலே அசைந்தாட வைத்திட்டு
அன்பே உன்னை தழுவி செல்லவிட்டு
ஆழாமல் வல்வினை செய்து கொன்றுவிட்டு
அவலகடலில் என்னை தள்ளவிட்டு சென்றுவிட
அவலம்தெரிய நெஞ்சமும் துன்பத்தில் மூழ்கிவிட்டதே