காதல்

அந்தி சாய்ந்து இரவும் வந்தது
இன்றோ இரவை இருள் கவ்வி இருக்க
விண்ணையும் கருமேகம் போர்த்தி இருக்க
முகம் காட்டி மேகத்தின் பின்னே மறைந்து போனது
வானத்து வெண்ணிலாவும் , கண்மூடி கண் திறந்து பார்த்தேன்
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை
என்னெதிரே நடந்து வந்துகொண்டிருந்தது வெண்ணிலா
இது எப்படி சாத்தியம் என்று நினைத்து
மீண்டும் நான் பார்க்கையில் அந்நிலவு
என்னருகே , காரிருளில் என் கரிய உருவிற்கு
தன்னொளி வீசிக்கொண்டிருக்க
அந்நிலவில் செவ்விதழ் கண்டேன் , கண்டபோது
அது மெல்ல விரிந்து அதிலிருந்து முல்லைச்சரமாய்
சிரிப்புதிற என் உள்ளத்தில் அது காமன் தொடுத்த
அம்பாய் வந்து தைத்தது



நான் விழித்துக்கொண்டேன்- என்னெதிரே
என்முன் எழுந்து நிற்கும் வெண்ணிலா
மண்ணில் உலாவி வந்து என்னை அணைக்க வந்த
என்னவளே எண்ணிலா என் காதல் நிலா
அவள் சன்னிதானத்தில் அல்லவோ நான் இப்போது
என்றறிந்தேன் உள்ளமெல்லாம் உவகைச்சிந்த

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Dec-18, 4:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 246

மேலே