அழகான காதல் கவிதை

💙🌺💙🌺💙🌺💙🌺💙🌺💙

*காதல் கவிதை*


*கவிஞர் கவிதை ரசிகன்*

💙🌺💙🌺💙🌺💙🌺💙🌺💙

என்னவளே!
உன் நினைவுகள்
என் மனதில்
கொட்டி வைத்திருக்கும்
வைர குவியல்கள்

உனக்காக எழுதப்பட்ட கவிதைகள்
ஏட்டின் மீது தெளிக்கப்பட்ட
வாசனை திரவியம்

அழகு உன்னில்
ஊர்வலம் வருகின்றது....

என்னுடைய விழிக்கு
நீ
ஒரு சலிக்காத
இயற்கை காட்சி..

உன்னை
படைத்தவனுக்கு
நன்றி சொல்கிறேன்
இல்லையென்றால்
நான் கவிஞனாக
இருந்திருக்க முடியுமா

பசிவந்தால்
பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள்...
ஆனால்
எனக்கு ஒன்பது தான்
பறந்து போகிறது
ஒன்று இருக்கிறது
அத உன்னுடைய நினைவுகள் தான்.

உன்னுடைய
சிரித்த முகத்தை பார்த்தாள்
என் இதயம்
ஒரு பனிக்கட்டியாக மாறிவிடுகிறது

அழகு கோவிலில்
ஆண்டவன் ஏற்றிய
அதிசய தீபம் நீ..

என்னுடைய கவிதையில்
நீ பிறக்கவில்லை
உன்னால்தான்
என் கவிதைகள் பிறக்கின்றன

அழகுக்கு
நீ
அழகு செய்கிறாய்...

கவிதை ரசிகன்

🌺💙🌺💙🌺💙🌺💙🌺💙🌺💙

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (23-Jan-19, 11:38 pm)
பார்வை : 74

மேலே