புகழ்ச்சொல்லைக் கேட்டாலே பூரிப்பார்

குறள் வெண்பா

புகழ்ச்சொல்லைக் கேட்டாலே பூரிப்பார் போல
யிகழ்வாரை யேற்பதில்லை யீங்கு!

நேரிசை வெண்பா

புகழ்ச்சொல்லைக் கேட்டாலே பூரிப்பார் போல
யிகழ்வாரை யேற்பதில்லை யீங்குன் – னகந்தையினை
நெஞ்சிற் கொளாதோர்ந்து நீக்கிக் கனிவாக
விஞ்சிடாது பேசு வியந்து! - வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Nov-19, 11:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 91

மேலே