எதற்கு

எதற்கு...?
_____________________________________________ருத்ரா

கடைசிச் சொட்டு வரை
அதை குடித்து முடித்துவிட்டேன்.
நுரையைக் கூட
பாக்கிவைக்க விரும்பவில்லை.
நாக்கை நுழைத்து
அதையும் நக்கி
சுத்தப்படுத்திவிட்டேன்.
அப்புறம்
எதற்கு அது?
அந்த கண்ணாடிக்கிண்ணத்தை
தூக்கி வீசி விட்டேன்.
நொறுங்கிப்போனது.
அந்த கடன்காரன் அள்ளிக்கொண்டு
போகிறான்.
எனக்கு என்ன வந்தது?
அது சரி..
இது வரை என் கையில் இருந்தது
வாழ்க்கையா?
மரணமா?

==================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (13-Jan-20, 3:15 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : etharkku
பார்வை : 158

சிறந்த கவிதைகள்

மேலே