கொரோனா

"கொரோனா எனும் அரக்கன்"

விழிநீர்
வழிந்தோடும்
நிலை ஏனோ...

விடியல்
தோன்றிடும்
திசை எதுவோ....

கொரோனா
எனும் அரக்கன்
செய்த வினை...

உலகினை
தலைகீழாய்
புரட்டி
போட்டதே...

நமக்கேன்
இந்த நிலை
என வாடிடும்...

மக்கள் நிலை கண்டு
மனம் வெம்பிடும்...

வீதியை
மிதிக்காமல்
விதியை
வெல்லலாம்...

வீட்டினுள்
தனித்திருந்து
நாட்டை
மீட்கலாம்...

பாவலர்.தே.கருணாகரன், வில்லியனூர்.

எழுதியவர் : வீ ஆர் கே (11-Apr-20, 1:18 pm)
பார்வை : 78

மேலே