பரம பதம்
வாழ்க்கை என்பது பரம பதம்
விளையாட்டைப் போல்தான்
என்று எண்ணிப்பாரத மனிதன்
தன் வாழ்வு உயர்வதற்கு
ஏணியாக இருந்தவர்கள்
இனி தேவையில்லையென்று
எட்டி உதைத்துவிட்டு...
வாழ்க்கையில் பிரச்சனை என்று
வரும் போது அதில் இருந்து
தப்பித்துக் கொள்ள எட்டி உதைத்த
ஏணியை மீண்டும் தேடுகிறார்கள்
அவர்களுக்கு அது கிடைப்பதில்லை
வான் புகழ் வள்ளுவன்
சொல்வது போல்
எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு..!!
--கோவை சுபா