காதலும் கடந்து போகும்

கண பொழுதில் தான் உணரும்

கற்பனையில் தான் நகரும்

கவிதுவமும் கணக்கின்றி

காதலிலே நடைபயிலும்

நினைவதிலே அவள்(ன்) வண்ணம்

நிறைந்திருக்கும் அவன்(ள்) எண்ணம்
நித்திரையும் பாராமல்

நிதர்சனமாய் இவ்வெண்ணம்

நிழற்படத்தை நகர்த்தயிலே

நின்றுவிடும் அவள்(ன்) தனிலே...

நில்லாத காதல் மட்டும்

நிறைந்திருக்கும் மனதினிலே...

காலம் அது மாறுகையில்

காதல் மட்டும் விதிவிலக்கா?

சூழ்நிலையின் பெயரினிலே

சுற்றம் எனும் உறவினிலே

உள்ளக்காதல் அதும் கடந்திடுமே...

உற்ற காயமதும் மறந்திடுமே...

உண்மை காதல் அது இல்லையெனில்....

-காதலும் கடந்து போகும்

எழுதியவர் : சுவாதி குணசேகரன் (18-Nov-20, 2:50 pm)
சேர்த்தது : சுவாதிகுணசேகரன்
பார்வை : 270

மேலே