ஏய்க்கும் மனிதனை பாரு

மாடி வீட்டு ஏழையும்
மன்னார்குடி மாமியும்
காடுவெட்டி தீரனும்
கருப்புசாமி பேரனும்
தேடுவது ஒன்றுதான்
தெவிட்டாத பணம்தானே.!!

ஆடு வித்த காசுயிங்கே
புல்லு திங்க போகுதா?
பாடுபட்டா இங்கு
பதவி வந்துசேருது?
பாவி மக்கள் எல்லோரும்
பணம் பணமுன்னுதான்
பாவம் செய்து வராங்க .
தாவி கட்சி போறாங்க.

வியாதி ன்னு போனாக்க
வியாபாரம் பேசறான் .
பல லட்சம் செலவு செஞ்சு
படிச்ச டாக்டர் பட்டந்தான்
கிடைச்ச வரைக்கும் லாபமே
கிட்னியை எடுங்கடா..

கல்விக்கூடம் இப்பெல்லாம்
காசுகூடமாயி போச்சு .
தாசி போல கல்வியை
பேசி விலை விக்கிறான்.
ஏசி பயனில்லையே?
தேசம் போன பாதைக்கு
மோசம் செய்தது யாரு?
வேஷம் போட்டு நம்மையே
ஏய்க்கும் மனிதனை பாரு...!

எழுதியவர் : சு.இராமஜோதி (16-Feb-21, 5:56 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 78

மேலே