காயம் இல்லா வலி
கத்தியின்றி ரத்தமின்றி
கண் கொண்டு கைதியாக்கும்
காதல் தரும் வலி அது...
காயம் கொண்டால்
மருந்துண்டு ...
காதல் முறிந்தால்
காலத்திற்கும் காயமின்றி
வலி உண்டு ...
மாட்டி கொண்டால் மாற்றிட
வழியின்றி மரணம் வரை
வலி கொண்டு வாழ்ந்திட
செய்யும் காயம் அது ...
இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35