தொழில் கூடமாக மாறிவரும் கோவில்கள்

தொழில் கூடமாக மாறிவரும் கோவில்கள்

நித்தம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மாநகரம். இயந்திரம் போல் செயல்படும் மனிதர்கள் . ஆண் பெண் இருவரும் நித்தம் உழைக்கும் நகரம் . அனைத்து மனிதர்களிடமும் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. எனது பெயர் ரவி நான் தமிழகத்தின் தென்மாவட்டத்தை சேர்ந்தவன். கடந்த பலவருடங்களாக சென்னையில் வசித்துவருகிறேன்.

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு கடவுள்பக்தி அதிகம் உண்டு . எந்த காரியம் தொடங்கினாலும் கடவுளின் வணக்கத்தோடு தான் தொடங்குவேன். நான் வாராவாரம் நான் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள கருமாரி அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.


அம்மன் மிகவும் சக்திவாய்ந்த சாமி. நான் ஆரம்பகாலங்களில் கோவிலுக்கு செல்லும் பொழுது கோவில் வாசல் அருகில் செல்லும்பொழுதே அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ரௌண்டு கட்டிக்கொள்வார்கள் என்னிடம் வாங்கு உன்னிடம் வாங்கு என்று போட்டிபோடுவார்கள்.ஆனால் அனைத்தும் விலை அதிகம் சொல்வார்கள் .

நான் வாராவாரம் கோவிலுக்கு செல்வதால் வாடிக்கையாக ஒரு கடையை பழக்கப்படுத்திவைத்துக்கொண்டேன் . எப்போழுது சென்றாலும் அவர்களிடம் அனைத்தும் வாங்கிக்கொள்வேன் அனைத்து பொருளும் நியாய விலையில் இருக்கும். கோவில் உள்ளே சென்றவுடன் அம்மனை தரிசனம் செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளது ஓன்று தர்ம தரிசனம் மற்றொன்று ரூபாய் ஐம்பத்துக்கான கட்டண தரிசனம் மூன்றாவது VIP தரிசனம்.

நான் கூட்டம் குறைவாக இருந்தால் தர்மதரிசனத்தில் செல்வேன் கூட்டம் அதிகம் இருந்தால் கட்டண தரிசனத்தில் செல்வேன். கோவிலில் உள்ள அணைத்து சன்னதியிலும் தட்டில் தட்சணை வைத்த அதற்கு தனி மரியாதை கொடுக்கப்படும் இல்லையென்றால் அதற்கு வேறு வரவேற்பு கிடைக்கும். காசுக்கேத்த தோசை மாதிரி காசுக்கேத்த மரியாதை.

ஆரம்பகாலங்களில் செல்லும்பொழுது கோவிலில் நடப்பது எனக்கு அந்த அளவு புரியவில்லை ஆனால் நாளாக நாளாக அனைத்தும் தெளிவாக புரிந்தது. கோவிலின் பிரகாரத்தில் பல இடங்களின் பணம் தானம் கேட்பார்கள். கோவிலின் முருகன் சன்னதிக்கு அருகில் ஒரு பெண்மணியும் அந்த பெண்மணியோடு இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க பெண்ணும் நின்று கொண்டு என் பெண்ணுக்கு திருமணம் வைத்துள்ளேன் உதவி செய்யுங்கள் என்று கேட்பார் நானும் ஆரம்ப காலங்களில் பாவம் என்று அனுதாபப்பட்டு கொடுத்தேன்.

அங்கிருந்து அடுத்த சன்னதி அருகில் சென்றால் அங்கு ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை அதற்காக நான் மடிப்பிச்சை எட்டுக்கிறேன் என்று கேட்டார் அதற்கும் அனுதாபப்பட்டு கொடுத்தேன். சன்னதிக்கு வெளியில் சென்றால் சந்நியாசி மற்றும் பிட்ச்சிக்காரர்கள் அவர்களுக்கும் ஏதாவது போட்டுவிட்டுத்தான் வரமுடியும்.

நான் மீண்டும் அடுத்தவாரம் கோவிலுக்கு சென்றேன் எப்போழுதும்போல சாமி தரிசனம் செய்தேன் வழக்கம் போல் அணைத்து இடங்களிலும் நிகழ்வுகள் அனைத்தும் நடந்தன. நான் கோவில் உள்பகுதியில் உள்ள கடையில் பலகாரம் வாங்கினேன் அப்பொழுது திருமணம் என்று மடிப்பிச்சை கேட்ட அந்த பெண் பலகாரம் வாங்கியது. அந்தசமயத்தில் எனக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது . நான் சந்தேக பட்டது உண்மையானது அவர்கள் ஏமாற்றுவேலை செய்பவர்கள் என்பதை முக்கியமான நபர் மூலம் தெரிந்து கொண்டேன்.


இப்படி நான் ஒவ்வொரு வாரமும் செல்லும்போது நான் பார்ப்பதுண்டு ஆனால் நான் பணம் போடுவதில்லை.
நான் என் மனசுக்குள்ளேயே நினைப்பதுண்டு கோவிலில் ஒருபக்கம் தட்சணை வைத்தால் தான் நாம் ஸ்பெசலா கவனிக்க படுவோம் மற்றொருபக்கம் போலித்தனமான பிட்சைகள். கோவிலை இப்படி ஒரு தொழில் செய்யும் இடமாக மாறிப்போயிருப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது .

என்னை பொருத்தளவு நான் சொல்வேன் அம்மன் மிகவும் சக்திவாய்ந்தது. நாம் என்ன நினைக்கிறோமா அது அனைத்தும் நடக்கும் மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அதனால் நான் எந்தவேளை இருந்தாலும் கண்டிப்பாக கோவிலுக்கு போகாமல் இருக்கமாட்டேன். இப்படி சக்தி வாய்ந்த சாமி இருக்கும் இடத்திலேயே இத்தனை தவறுகள் நடக்கிறது எப்படி தவறு செய்பவர்களுக்கு துணிச்சல் வருகிறது என்று புரியவில்லை என பலமுறை நான் யோசித்தது உண்டு.

நான் கோவிலுக்கு சென்றதால் பக்தி ஒருபக்கம் அது இல்லாமல் சமூகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது மக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதெல்லாம் தெரிந்துகொண்டேன். கோவிலில் கூட தொழிலாக பணமே முக்கியத்துவம் இருப்பதை என்னால் பார்க்கமுடிந்தது. பலர் மனசாட்சியை விற்றுவிட்டு பணத்திற்காக செயல்பட்டதை பார்க்கும்பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. ஒருசிலர் உழைப்பதற்கு கஷ்டப்பட்டு கேவலமான செயலில் ஈடுபடுகிறார்கள் . கடவுள் மீது பயம் இன்றி செயல்படுகிறார்கள். இப்படி பணம் பண்ணும் இடமாக கோவில்கள் மாறுவதை மாற்றி அமைக்கவேண்டும். இப்படி பல கோவில்கள் உள்ளன அனைத்தும் திருந்த வேண்டும். தொழில்கூடாமாக மாறிவரும் கோவில்களை மாற்றவேண்டும் மற்றும் அதனை செய்வவர்களையும் ஊக்கிவிப்பவர்களையும் திருத்தவேண்டும் .

எழுதியவர் : முத்துக்குமரன் P (11-Jul-21, 11:07 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 80

மேலே