முரணூடல்
என்னுள் கரைந்த சகி நீ,
இருந்தும் தனித்தே பயணம்
சில நேரங்களில்..,
உன் வாசத்தை விழிமலர் பரப்ப வண்டுகள் கூட்டம் வடம்பிடித்து வரிசையில் என்னைத் தள்ளி....
பூபாலத்தில் கலைந்த ஒப்பனை அழகாய் என்னுடன் நித்தம்... அந்திநேரப் பொழுதுகளில் உன்னை தேடும் எனக்கு ஆலாபனை ஆனந்தமாய்..,
நீ கதைக்கும் பொய்யில்
எத்தனை வாசம்
நான் மணக்க என்னில்..,
உதடாய் உறவாடும் நம் உறவு
சில நேரங்களில் அன்றிலாய் பதைக்கிறது...,
என்னில் உண்டு முரண்;
உன்னில் உண்டு முரண்;
நம்மில் உண்டு முரண்;
முரண்படா...ஊடலாய்...!