நிலவுக்கு ஓர்
நிலவே
உன்னைப் பார்த்து
கவிதை எழுத
களம் புகுந்த
கவிஞர்கள் எத்தனை?
உன்னைப் பார்த்து
காதலிக்க
களம் புகுந்த
காதலர்கள் எத்தனை?
உன்னைப் பார்த்து
குளிர்ச்சி அடைந்த
உள்ளங்கள் எத்தனை?
உன்னைப் பார்த்து
வாழ்வியலை
கற்றுக்கொண்ட
இளைஞர்கள் எத்தனை?
உன்னைப் பார்த்து
பெண்கள்
பெருமைப்பட்டுக் கொண்டது
எத்தனை காலமாக
கலங்கம் வரினும்
வளர்ந்து காட்டி
வாழ்வு சொல்வாய்!
உன்னை பாடாத
கவிஞர்களே இல்லை!
உன்னைப் பாடாவிட்டால்
அவன் கவிஞனே இல்லை!!
குழந்தைக்கு
சோறூட்ட வருவாய்!
கோதைக்கு
நாணமூட்ட வருவாய்!
பிள்ளைக்கு
கதை சொல்ல வருவாய்!
அல்லுக்கு
விளக்காய் வருவாய்!
கடலுக்கு
அலை எழுப்ப வருவாய்!
உடலுக்கு
உற்சாகம் தருவாய்!