தொடு வானத்தின் காதல்
அது எங்கே போகிறது?
எதை நோக்கி போகிறது?
யாரைநோக்கிப் போகிறது?
ஒன்றும் புரியவில்லை!
அதன் ஓட்டம் ஏதோ
காரணத்தின் பொருட்டுதான்
என்பது மட்டும் தெரிகிறது!
அது மலைகளின் மீது
தவழ்ந்து குழந்தையைப்
போல் விளையாடுகிறது..
காடுகளின்மீது சிறிது நேரம்
இருட்டுப் படுக்கையில்
ஓய்வெடுக்கிறது..
வயல்வெளியில்
வெளிச்சம் பாய்ச்சி
வெள்ளாமை செய்கிறது..
கடற்கரையில் நின்று
பார்த்தபோதுதான் தெரிந்தது
அதன் பயணம் கடலை
முத்தமிடவே என்று,
ஆம்!
அந்தத் தொடுவானம்
அது கடலைத் தான்
காதலிக்கிறது...