இறுதி ஊர்வலம்
இறந்த மனிதனுக்கு
ஆயிரம் பஞ்சாயத்துகளுடன்
ஆரறிவு படைத்த மனிதன்
நடத்துகின்றான்
"இறுதி ஊர்வலத்தை" ...!!
ஆனால்...
இறந்த பூச்சி புழுவுக்கெல்லாம்
ஐந்தறிவு படைத்த எறும்புகள்
மிகவும் அமைதியாக
நடத்துகின்றது
"இறுதி ஊர்வலத்தை" ...!!
--கோவை சுபா

