அடைவாகச் சொன்னயிவை தன்னுண்மை உன்னி உரைக்கும்நாம் - உண்மை விளக்கம் 18
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
காலம் நியதி கருதும் கலைவித்தை
ஏலயிரா கம்புருட னேமாயை – மாலறவே
சொன்னோம் அடைவாகச் சொன்னயிவை தன்னுண்மை
உன்னி உரைக்கும்நாம் உற்று 18
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
காலமும் நியதியும் கருதுகின்ற கலையும் வித்தையும் பொருந்த இராகமும் புருடனும் மாயையுமாம்,
இவற்றை மயக்கமற முறையாக (உனக்கு)ச் சொன்னோம்,
கூறிய இவற்றின் உண்மையை உற்றுநோக்கி (இனி) நாம் சொல்லுவோம்.