அடைவாகச் சொன்னயிவை தன்னுண்மை உன்னி உரைக்கும்நாம் - உண்மை விளக்கம் 18

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

காலம் நியதி கருதும் கலைவித்தை
ஏலயிரா கம்புருட னேமாயை – மாலறவே
சொன்னோம் அடைவாகச் சொன்னயிவை தன்னுண்மை
உன்னி உரைக்கும்நாம் உற்று 18

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

காலமும் நியதியும் கருதுகின்ற கலையும் வித்தையும் பொருந்த இராகமும் புருடனும் மாயையுமாம்,

இவற்றை மயக்கமற முறையாக (உனக்கு)ச் சொன்னோம்,

கூறிய இவற்றின் உண்மையை உற்றுநோக்கி (இனி) நாம் சொல்லுவோம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-22, 5:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே