இளஞ்சூரி யன்தானும் வந்து மகிழ்வில் இவள்மே னிதழுவுகி றான்

இளவேனில் தென்றல்பூங் காற்றேநீ இன்று
இவள்கூந்த லோடுற வாடவந் தாயோ
இளஞ்சூரி யன்தானும் வந்து மகிழ்வில்
இவள்மே னிதழுவுகி றான்


இளவேனில் தென்றல்பூங் காற்றேநீ இன்று
இளஞ்சூரி யன்தானும் வந்து தழுவ
இவள்மேனி நீயும் தழுவிட வந்தாய்
இவளெழில் கூந்தல் தனை

இளவேனில் தென்றல்பூங் காற்றேநீ இன்று
இளஞ்சூரி யன்தழுவிப் பார்க்க --இளமை
இவள்மேனி நீயும் தழுவிட வந்தாய்
இவளெழில் கூந்தல் தனை

------ஒரே கற்பனை பல விகற்ப இரு விககற்ப இன்னிசை மற்றும் நேரிசை வெண்பாக்கள்
கவிதைக்கு கற்பனையே மிகவும் முக்கியம் கற்பனை வளம் இருப்பின் இலக்கணம் சாரா கவிதையும் இனிக்கும் .
கம்பனும் புகழேந்தியும் வென்றது விருத்தத்தாலும் வெண்பாவினாலும் அல்ல
கற்பனைனை வளத்தால் அவர்கள் இப்பொழுது நமது காலாத்தில் வாழ்ந்திருந்தால் புதுக்கவிதையிலும்
வென்றிருப்பார்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jan-23, 6:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே