ஜன நாயகம்

நாட்டின் ஜனநாயகம்
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
தேர்தல் என்னும் தேரில்
அலங்கரிக்கப்பட்டு
வீதி வீதியாக உலா வந்து
பண நாயகத்தின்
பிடியில் சிக்கி சீரழிந்து,
மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்புயென்று
"மணி" "மகுடம்"
சூட்டிக் கொள்கிறது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Feb-23, 8:03 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mani makudam
பார்வை : 221

மேலே