மனசெல்லாம் மார்கழி வெண்பனியைத் தூவி
மனசெல்லாம் மார்கழி வெண்பனியைத் தூவி
கனவில்வந் தேற்றுகிறாய் கார்த்திகை தீபம்
நினைவெல்லாம் வீசுகிறாய் நீஆடிக் காற்றாய்
தினம்வருவாய் ஆவணியில் தாவணித்தென் றல்போல்
மனைவியடி நீஎனக்கு மங்கலத் தையில்
கனவுநன வாகும்அன் பே
----ஆறு அடி கொண்ட ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்து அடி முதல் பன்னிரண்டு அடி வரை எழுதப்படுவது
பஃறொடை வெண்பா
ஆடி ஆவணி கார்த்திகை மார்கழி தை ஐந்து மாதங்கள்
வரும்படி அமைத்திருக்கிறேன்
பன்னிரண்டு மாதங்களும் பன்னிரண்டு அடிகளில் வருமாறு
இன்னொன்று முயன்று பார்க்க வேண்டும் .