கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென - முத்தொள்ளாயிரம் 59

நேரிசை வெண்பா

கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்! 59

- முத்தொள்ளாயிரம்

பொருளுரை

கொழுத்த தென்னைமரம் சூழ்ந்திருக்கும் ஊர் கூடல் நகரம்; அவன் இந்தக் கூடல் அரசன்; அவனை விரும்பி என் நெஞ்சு சென்றுவிட்டது. இது அன்னைக்குத் தெரியவில்லை. வெறும் உடம்புக் கூட்டுக்குக் காவல் போட்டிருக்கிறாள்!

குறும்பூழ் = காடை என்னும் பறவை; காடை பிடிக்கும் வேடன் வலையை விரித்து வைப்பான். அதன் அருகில் தான் பழக்கி வைத்திருக்கும் பெண்-காடையைப் பறக்க விடுவான். அது ஆண்-காடையை அழைத்துவந்து கூட்டில் விழச் செய்யும். அன்னை அப்படிச் செய்கிறாளே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-25, 8:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே