என்றும் அசையாத உள்ளத் தவர் - ஆசாரக் கோவை 52
இன்னிசை சிந்தியல் வெண்பா
படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத் தவர். 52
- ஆசாரக் கோவை
பொருளுரை:
ஒழுக்கத்தில் தவறாத மனமுடையவர்கள் வஞ்சனைச் சொல், பயனற்ற சொல், நாவடக்கமில்லாத சொல், பழிச்சொல், புறங்கூறுதல் ஆகிய சொற்களை எக்காலத்திலும் சொல்லமாட்டார்கள்.
பட்டி - கள்ளம், இங்கு நாவடக்க மின்மை, படிறு – வஞ்சனை
புறங்கூறல் - முன் நின்று புகழ்ந்து பின்நின்று இகழ்ந்துரைத்தல்,
‘பட்டியுரையாம் வசையும்' என்றும் பாடம்.

