எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ --தாகூர் ---எ பி க



எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாய் இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய தேசிய எல்லைகளால்
துண்டாடப்படாமல் இருக்கிறதோ
எங்கே வார்த்தைகள் உண்மையின்
ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதோ
எங்கே சோர்வற்ற கரங்கள்
முழுமையை நோக்கி விரிகிறதோ
எங்கே அறிவு என்னும் நீரோடை மூடப் பழக்க வழக்கங்கள் எனும் பாலைப் பெருமணலில்
பாதை இழந்து போகாமல் இருக்கிறதோ
எங்கே மனம் எப்போதும் விரிந்து பரந்திடும்
சிந்தனை செயல்களில் உன்னால்
எடுத்துச் செல்லப்படுகிறதோ
அங்கே அந்த சுதந்திர சொர்க்க பூமியில்
எந்தையே என் நாடு விழித்தெழட்டும்

---ரவீந்திரநாத் தாகூர்
தமிழில் கவின் சாரலன்

எழுதியவர் : ரவீந்திரநாத் தாகூர் (12-Nov-11, 5:21 pm)
பார்வை : 775

மேலே