வரமும் ! சாபமும் ! (நகைசுவைக்காக மட்டும்)

காட்டில் கடும் தவம் புரியும் பக்தனுக்கு
கடவுள் காட்சி தருகிறார் !
பக்தா நின் பக்திக்கு மெச்சினோம்
வரம் ஒன்றும் சாபமொன்ரும் கேள் !

சுவாமி WHY THISH கொலவெறி !
வரம் OK சாபம் எதற்கு ?

நீ கடும் தவம் புரிந்தமைக்கு வரமும்
நிஷ்டையில் இருந்த என்னை
DISTRUPT செய்தமைக்கு சாபமும் பெற்றாகவேண்டும் !

அப்படியே ஆகட்டும் சுவாமி !
நான் மதுமதியை மணம்முடித்து
மாதமொன்றே ஆகிறது
இவளே ஆறு சென்மத்திற்கு மனைவியாய்
வரவேண்டும் என்ற வரம்வேண்டும் !
ஏழாவது சென்மத்தில் இந்தியாவில்
பிச்சைக்காரனாய் பிறக்கவேண்டும்
என்ற சாபம்வேண்டும் !
...................................................
...................................................
...................................................

கடவுளின் உள்மனது சொல்கிறது
வரத்தையும் ! சாபத்தையும் !
மாற்றியல்லவா கேட்டிருக்கிறான் மடையன் !

எழுதியவர் : மோகனதாஸ் காந்தி (25-Dec-11, 10:43 pm)
பார்வை : 1364

மேலே