மோகனதாஸ் காந்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மோகனதாஸ் காந்தி
இடம்:  anniyenthal (madurai) .now I am in ABUDHABI
பிறந்த தேதி :  02-Oct-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2011
பார்த்தவர்கள்:  1376
புள்ளி:  328

என்னைப் பற்றி...

nan oru kavithai piriyan
nalla padalgal virumbi ketben.
nagaisuvai vedios megavum pedikkum

என் படைப்புகள்
மோகனதாஸ் காந்தி செய்திகள்
மோகனதாஸ் காந்தி - கணேச மூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2015 10:26 am

உன் விழி என்னும் உளியால் நீ
என்னை பார்த்த போதெல்லாம்
சிற்பங்களாய் என்னை சீரமைத்தேன்
நீ என்மேல் மேலும் படவேண்டும்
என்ற பரந்த ஆசைகளோடு..

எண்ணமும் ஏக்கமும்
என்னுள் வாட்டி வதைத்தன..
என்று நீ என்னவளாய் என்னோடு
இருப்பாய் என்ற எதிர்பார்ப்புடன்.

உன்னிடம் உதிர்க்க இருக்கும்
முதல் வார்த்தைக்கு முக்கணிகளினும்
சுவை மிகுந்த வார்த்தைகள் தேடி
தோற்றேன் உன்னுடைய பெயரினைவிட
பெரிதாய் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து..

தமிழழகி விரும்புகிறேன் உன்னை !..

மேலும்

படைப்பு நன்று.... முக்கணி=முக்கனி 23-Sep-2015 7:17 am
திருத்தப்பட்டது..நன்றி..விரும்புகிறேன்.. உங்கள் விமர்சனத்தை..என் ஒவ்வொரு படைப்பிலும்.. 20-Sep-2015 9:32 am
நன்றி தோழா..சிறப்பு 20-Sep-2015 9:29 am
என்றும் உங்கள் நல்லாசியுடன் .... 20-Sep-2015 9:28 am
கணேச மூர்த்தி அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2015 3:19 pm

ஆச்சு பத்து வருஷம்
ஆனாலும் புள்ள இல்ல
ஆம்பளை தானா, அவென் ! .. ன்னும்

ஆத்தா புது பொண்ணு !
அந்த பக்கம் போக வேணாம்.
இலவங்காயா அவ இருக்கா,
பத்து வருஷம் பாத்தபடி.. ன்னும்

சொன்னவக இன்னைக்கி,

ஆயிருக்கும் அம்புட்டு வருஷம்,
ஆண்டவன் படைக்க,
அவளுக்கு பொறந்த அந்த
ஆழி முத்துக்கு !...ன்னு, சொன்னப்ப

சொர்க்கம் போயி திரும்பி வந்தாள்..
அவள் பெற்ற பிள்ளைக்கு அதுவும் இணை இல்லை என்று..

மேலும்

அருமை வரிகள் 07-Sep-2015 5:50 pm
ஏக்கம் அருமை ! உலகநடப்பு / மனித மனம் உண்மை ! 07-Sep-2015 2:56 pm
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Sep-2015 12:06 am
நன்றி.. 01-Sep-2015 4:34 pm
மோகனதாஸ் காந்தி அளித்த படைப்பில் (public) Ganesha Moorthi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Nov-2011 1:05 pm

(நாத்து நடும் நாகம்மாள் , செல்லாத்தாள் இருவரும் அவர்கள் கதையையும் ,ஊரு கதையையும் பேசிக்கொண்டு நாத்துநடவு நடக்கிறது )


நாத்து நடும் நாகம்மா
நான் சொல்லுஞ் சொல்ல கேலம்மா !

என்னாத்த ஏஞ்செல்லாத்தா
சொல்லாத்தா எம் பெரியாத்தா

ஏலா எடுத்தஎடுப்பிலையே
இந்த ஆத்து ஆத்துரவ

சரி சொல்லு பெரியத்தா

''முக்காணி நெல வயக்காட்டில்
மூணு செண்டு பாத்திகட்டி
தண்ணிபாச்சி தொழியுழுது
பரம்படிச்சு உரம்போட்டு
ஊறவச்ச வெதநெல்ல
காலம் பாத்து வெதசிறனும்
அப்பப்ப தண்ணிவிட்டு
தேவபபட்டா மருந்தடிச்சு
இப்பபொறந்தபுள்ள போல
பொத்தி பொத்தி வளத்திடனும்
இருவத்தியொரு நாள்கழிச்சி
கொமரிபுள்ள ரவுக்க போல

மேலும்

நன்றி தோழா ! 07-Sep-2015 2:50 pm
உங்களுக்கே உரித்தான..முத்தான சொற்கள்..அசத்தலாய் இருந்தது..ஆதியிலிருந்து அந்தம் வரையிலும், 01-Sep-2015 3:54 pm
கவிதை மிக அருமை... உழவும் நடவும் பெண் திருமணமும், கற்பனை அற்புதம் தோழா... 05-Mar-2012 12:10 am
மிக்க நன்றிகள் தங்கை கவி அவர்களே உங்கள் கவியையும் தாருங்கள் கவியின் கவிபடிக்க கவிஞருக்கெலாம் ஆசையம்மா ! அன்புடன் அண்ணன் மோகன்தாஸ் 09-Dec-2011 11:30 am
மோகனதாஸ் காந்தி அளித்த படைப்பில் (public) Ganesha Moorthi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2012 9:43 pm

அப்போ எனக்கு 16 வயசிருக்கும்
பாலிடெக்னிக் முதலாமாண்டு
முதல் நாளுக்கும் முந்தைய இரவு

பிறந்த நாள்முதலாய் உன் முந்தானை பிடித்துக்கொண்டு
உன்னையே சுற்றிவந்த உன் ஒரே செல்ல மகன் (நான்)

முதன்முதலாய் படிப்பிற்காக உன்னை பிரியவேண்டி வந்தது
இத்தனைக்கும் ஒரேமாவட்டதின் கடைசிமூலை காரைக்குடி
அதிகபட்சம் 80 கிலோமீட்டர் தொலைவு கூட இருக்காது
அதுவே உனக்கும் எனக்கும் செவ்வாய் கிரகமாய் தோன்றியதே அம்மா உனக்கு நெனவிருக்கா ?

நீ அப்பாவிடம், ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு நு
ஒத்த ஆம்பள புள்ள பெத்துருகேன்,
இங்கயே மதுர கோட்டையில இல்லாத காலேசா இங்க இருந்தா புள்ளபோயிட்டு போயிட்டு வருவான்ல
இந்தமனுசன் நான்

மேலும்

இப்படி ஒரு பாராட்டு,ஒரு சிறந்த கவிஞ்கறாய் உருவாகிகொண்டிருக்கும் உங்களிடம் இருந்து பெற்றது . மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தோழா ! நன்றி 07-Sep-2015 2:49 pm
உங்கள் படைப்புகளில்..இதுவரை நான் படித்ததில், இது மிகவும் சிறப்பு.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..தோழா..என்றும் நட்புடன்.. 01-Sep-2015 3:45 pm
மிக்க நன்றிகள் தோழி மதி ! நீண்ட இடைவேலைக்கு பிறகு இப்போது தன நேரம் கிடைத்ததா தோழி ! அன்புடன் தாஸ் 12-Mar-2012 11:36 pm
சுமி அக்கா அவர் மதுரை இல்லை... மதுரை பக்கம்.. ஹா ஹா... 04-Mar-2012 10:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

கணேச மூர்த்தி

கணேச மூர்த்தி

விருதுநகர்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (13)

கணேச மூர்த்தி

கணேச மூர்த்தி

விருதுநகர்
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
மேலே