விரும்புகிறேன்

உன் விழி என்னும் உளியால் நீ
என்னை பார்த்த போதெல்லாம்
சிற்பங்களாய் என்னை சீரமைத்தேன்
நீ என்மேல் மேலும் படவேண்டும்
என்ற பரந்த ஆசைகளோடு..

எண்ணமும் ஏக்கமும்
என்னுள் வாட்டி வதைத்தன..
என்று நீ என்னவளாய் என்னோடு
இருப்பாய் என்ற எதிர்பார்ப்புடன்.

உன்னிடம் உதிர்க்க இருக்கும்
முதல் வார்த்தைக்கு முக்கணிகளினும்
சுவை மிகுந்த வார்த்தைகள் தேடி
தோற்றேன் உன்னுடைய பெயரினைவிட
பெரிதாய் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து..

தமிழழகி விரும்புகிறேன் உன்னை !..

எழுதியவர் : கணேச மூர்த்தி (16-Sep-15, 10:26 am)
Tanglish : virumbukiren
பார்வை : 413

மேலே