அண்ணன் மகனே

உன் மழலை மொழி கேட்க நித்தம் காத்திருந்தேன்..
நாள் தோறும் சொல்லி தந்தேன்...
"அம்மா சொல்லு"
"அப்பா சொல்லு"
"தாத்தா சொல்லு"
"பாட்டிசொல்லு"
எப்படி சொன்னாய் என் செல்லமே "த்த"
"அத்த"
அண்ணன் மகனே.!!
அற்புத செல்வனே..!!
உன் பவள வாய் திறந்து
நீ சொன்ன அந்த முத்தான
முதல் வார்த்தையில்
நான் கொண்ட இன்பத்தை எழுத வார்த்தை வேண்டும் எனக்கு.