நட்பு என்றும் நம்மை தோல்வி அடைய விடுவதில்லை ...

காதலில் காதலியை
உயிருக்கு உயிராய் நினைத்து
தேவதையாய் பாவித்து
கவிதை பல வார்த்து நீதான் என் உலகம்
என்ற போதும் ஏற்க மறுக்கும் மனம்
சில நேரங்களில் உண்மைக் காதலும்
ஒருநாள் தோல்வியில் முடியும்...

ஆனால்...

நட்பில் அதுபோல் எதுவும் இல்லை
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை
ஒரு புன்னகை போதும் - என்றும்
நட்புடன் உண்மையாய் இருந்தால்
வாழும் நட்பு
எந்நாளும் நட்பில்
தோல்வியே இல்லை
"நட்பு என்றும் நம்மை
தோல்வி அடைய விடுவதில்லை".


செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (14-Mar-12, 10:03 am)
பார்வை : 558

மேலே