கருத்தாழ மிக்க எனது தோழி

இறந்து விட்டாள்
எனது அம்மா
நான் பிறந்தவுடன்

கண்விழித்த போது அவள்
கடவுளுடன் சென்று விட்டாள்

கல்லூரி வகுப்பறையில் என்னருகில்
கருணையான தாயன்போடு

கருத்தாழ மிக்க எனது தோழி
கண் எதிரே நட்பு மழை

கண்டு விட்டேன் என் தாயை

எழுதியவர் : (14-Mar-12, 9:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 279

மேலே