பெருந்தலைவர் காமராஜர்
விருதுபட்டியில் வித்தாய் விழுந்து விருட்சமாய் வளர்ந்த வீரதலைவா..
விண்ணில் வளம் வரும் சூரியனைபோல் இமண்ணில் நலம் பல தந்து நாட்டிற்காக உழைத்தீரே.!
உடலை உருக்கி,சமூக உணர்வை பெருக்கி,
கல்லாமை எனும் காரிருளை நீக்கி,
தரணியில் அனைவரும் கல்வியொளி பெற
நாட்டிற்காக உழைத்து கல்விக்கூடங்களை வழங்கிய வள்ளலே!!
கல்வியும்,இவ்வுலகமும் உள்ளவரை
நின் திருப்பெயர் பாரில் நிலைத்திருக்கும் பாரத பெருந்தலைவா..!!!