அன்பே சிவம் மறந்த மனிதர்கள்
ஆலயத்தில் அனைவருக்கும்
அன்னதானம் செய்யும் மனிதரே...
சாலையோரத்தில் துன்புறும்
மாற்றுத் திறனாளிகளை மறந்தாயே...
அனைத்து பாவங்களையும் மிகையாக செய்து விட்டு,
கடவுளுக்கு குறைவாக லஞ்சம் கொடுக்கும் மனிதரே...
அந்த குறைவான லஞ்சத்தை,
குறைகள் உள்ள மனிதருக்கு தருவதில்
உமக்கு என்ன குறையோ...