சன்னல்கள்

இந்தச் சன்னல்கள்
விசித்திரமன்னவை!
வீடுகளில் தொலைந்துபோகும்
சந்தோசங்களை
மனம் ...
சன்னல் வழியே
தேடுகிறது!

சாலைகளில்
குடைகளுக்குள்
மழையை ரசிக்கமுடிவதில்லை!
சன்னல் வழியே
வீட்டின் வெதுவெதுப்பில்
மழையின் சாரலில்
கரைகிறது மனம்
சன்னல் வழியே!

எவ்வளவோ அதிசயங்களை
தாங்கியபடி
காற்றின் சிறகடிப்புகளில்
இந்தச் சன்னல்கள்
சிரிக்கின்றன!

எங்கோ தூரத்தில்
தெரியும் எதிர்காலத்தை
இந்தச் சன்னல்கள்
கண் முன்னே
நிறுத்துகின்றன!

மழையை ரசித்துக்கொண்டே
மணிக்கணக்கில்
சன்னலருகில் நின்றதுண்டா?

மனம்
பயணிக்கும் வேகம்
உங்கள்
வாழ்வின் எல்லா
மறக்க முடியாத
தருணங்களையும்
கண் முன்னே காட்சிப்படுதுவதை
யாரும்
மறுக்கமுடியாது!

எழுதியவர் : சரவணா (8-Aug-12, 11:29 pm)
பார்வை : 197

மேலே