கிராமத்து அத்தை பெண்ணே ..
பொய் காலு குதிரை ஏறி
பொங்களூரு சந்தை ஏறி
வாய்க்காலு வரப்புமேறி
வந்த பாட்டு தானம்மா
இது சந்த பாட்டு இல்லம்மா
என் சொந்த பட்டு தானம்மா
கொத்தமல்லி தழை பிடுங்கி
கட்டு கட்டா பிரிச்சு கட்டி
ஏத்தி வச்சு எறக்கி வச்சு
வெலயக் கூட்டி வித்து புட்டு
முறுக்கு வாங்கி .. பன்னு வாங்கி
முதக்கி தின்ன நேரம் போக
என்ன நெனச்சுக்கிட்ட துண்டாம்மா
ஒரு லெட்டர் போட்டா என்னாம்மா