##### என் காவிய நாயகன் ##### (சுவாமி விவேகானந்தர் )

காளியின் வரம் வாங்கி
கண்ணியவான் ஒருவன்
கலிகாலத்தில் பிறந்தான்
கடமையில் சிறந்தான்
அளவற்ற ஞானத்தால்
அகிலத்தையும் வென்றான்
உளம் கொண்ட பலத்தால்
உத்தமனாய் வாழ்ந்தான்
சமுதாயம் தன்னில்
சாக்கடைகள் கொண்டபோது
சங்கடங்கள் கொண்டான்
சடுதியில் மாற்றிவிட துடித்தான்
சரித்திரத்தில் ஓர் தலைவன்
சமுத்திரத்தில் சக்தி பெற்றவன்
வீணர்களுக்கு பாடம் சொன்னவன்
ஈனர்களுக்கு பண்பு புகட்டியவன்
நல்லதொரு வீணையாய்
நலம்பட இசை தந்தவன்
நாற்றிசையும் ஒலித்தவன்
நன்மக்கள் பலர் ஈர்த்தவன்
திரைகளும் புகழ் பாடிடும்
திங்களும் தேடியே தேய்ந்திடும்
காற்றோடு அவன் கலந்துவிட்டான்
காவிய நாயகன் ஆகிவிட்டான் !!