உன்னால் மறைந்து போனேன்

உன் கண்கள் இரண்டும் மோதி
நெஞ்சம் உடைந்து போனேன்

உன் வார்த்தைகள் மோதி
உடல் நனைந்து போனேன்

உன் வாசம் மோதி
உள்ளம் மலர்ந்து போனேன்

உன் கைகள் மோதி
சிலையாகிப் போனேன்

உன் காதல் என்னை மோதி
உன்னில் கரைந்து போனேன்

எழுதியவர் : ரத்னயுவா (21-Oct-12, 8:45 pm)
சேர்த்தது : yuvarathna
பார்வை : 170

மேலே