நீண்ட ஆயுள்

ஒரு சம்சாரி எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது.

நூறாண்டுகள் வாழ்ந்த ஒருவரைப் போய்ப் பார்த்தான்.

அவரிடம், “அய்யா! நூறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டீர்களே எப்படி என்று சொல்லுங்களேன்?” என்று கேட்டான்.

அதற்கு அவர், “நான் மாமிசம் சாப்பிட மாட்டேன். குடிப்பழக்கம் என்னிடம் உண்டு அதனால் தான்!” என்று பதிலளித்தார்.

உள்ளறையிலிருந்து இலேசான இருமல் சத்தம் கேட்டது.

அங்கே இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.

“எனது அண்ணன்தான்” என்றார் அந்த நூறாண்டு மனிதர்.

“உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார் சம்சாரி.

அவரைப் பார்த்த சம்சாரி, “அய்யா! உங்க தம்பி நூறு வருடம் வாழ்வதைப் பெருமையாக இருக்கிறது, ஆனால் அவருடைய அண்ணன் நீங்கள் அதைக் காட்டிலும் கூடுதலான் ஆண்டு வாழ்ந்து வருகிறீர்களே? எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது?” என்று கேட்டார்.

“நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன். குடிப்பழக்கம் எனக்கு இருப்பதால் தினமும் எனக்கு குடிக்காமல் இருக்க முடியாது” என்றார் அந்த நூறாண்டு மனிதரின் அண்ணன்.

சம்சாரிக்குத் தலையைச் சுற்றியது.

எழுதியவர் : Rupa (26-Oct-12, 4:54 pm)
சேர்த்தது : dine
Tanglish : neenda aayul
பார்வை : 271

மேலே