தமிழ்ப் பறை
தரத்த மறந்த தமிழா
உனக்கு தாய்மொழி
என்ன உமிழா?
மகனே!
யார்றா அந்த லேடி?
அது தான் மம்மி,டாடி.....
ஷிட்டுன்னு பையன்
சட்டுன்னு சொன்னா
குட்டுன்னு நீயும்
பாக்குற...
குணத்தில் கழிவ
நீயும் சேக்குற
பையன் பட்டுன்னு சொல்லி
உன்ன ஒதுக்கினா,அப்புறம்
தமிழில ஏண்டா புலம்புர,
பிரிட்டிஷ்காரன்
பிச்சை கேட்டாலும் அவன்
தாய்மொழியிலையே
கேக்குறான்!
இங்க ஏ,பி,சி.டி
படிச்சி முடிச்சதும்
காலர எல்லாம் தூக்குறான்.
நீ செத்தும் மண்ணுல உன்
சத்து கொறையாது நீ
சாப்புட்ட தமிழு சோத்தால
உயிர்விட்ட பின்னால
தமிழ் மண்ணுல விழற
பின்ன தமிழ,ஏண்டா
காப்பாத்துல.