அன்பு
வா வா என்று உன்
வருகைக்காக பலர் காத்திருக்க நான்
வா வென்று அழைக்காமல் என் உள்ளம் நாடி
வந்த வாணியே .....
உந்தன் உன்னத
உறவு கண்டு எந்தன்
உள்ளம் உவகை கொள்ளுதடி
உந்தன் பேரன்பில் திளைக்கும் இக்கணமே
உயிர் பிரிந்தால்
உன் தொப்புள் கொடி
உறவு வேண்டி
உந்தன் வயிற்றில்
உன் குழந்தையாய் பிறப்பேனடி …..