திருமண வாழ்த்து
இல்லறமெனும்
இன்பச் சோலையிலே
இணைப் பறவைகளாய்
மெல்லிசை பாடி
மணமன்றலில் கூடும்
மணமக்களே..!
நீவீர்
நல்லறம் பேணி
நலமுடன் வாழ்வீர்.!
சொல்லறம் பழகி
சொர்க்கம் காண்பீர்!
மனையறம் துலங்கி
மாண்புடன் மகிழ்வீர்.!
பேறுகள் பல பெற்று
பெயர் நிலைக்க வாழ்வீர்.!
இன்ப துன்பத்தில்
இரண்டெனக் கலந்து
ஒன்றென ஆவீர்.!
அன்பு மிகுந்து
அக்கறை நயந்து
பண்பில் கனிந்து
பாசத்தில் இணைந்து
பாருலகம் வியந்து
போற்றிப் புகழ்ந்திட
பல்லாண்டு வாழ்க .! வாழ்கவே.!
( திரு அகன் ஐயா அவர்களின் இல்லத் திருமண வாழ்த்து இது.! மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ உள்ளம் உவகை கொண்டு உளமாற வாழ்த்துகிறோம்.)