நான் இறந்தும் கவி எழுதுவேன் என்னவளுக்காக

உன்னை
வெள்ளை உடையில்
பார்க்கும்பொழுது
தேவதை வருகிறாள்
என்று சொன்னவர்களெல்லாம்
இப்பொழுது
விதவை வருகிறாள்
என்று விலகிசெல்கிறார்கள்.!
நான் இறந்துவிட்டதாய்
பேசிக்கொள்ளும்
நம்மூரார்களுக்கு
எப்படி தெரியும்
நான் உன் இதயத்தில்
வாழ்ந்துகொண்டிருப்பது.!
நான் மண்ணில்
புதைந்துவிட்டதாய்
நினைத்துக்கொண்டிருக்கும்
மானிடர்களுக்கு
எப்படி புரியும்
நான் உன் மனதில்
புதைந்துகிடப்பது.!
உனக்கு பிடித்த
மல்லிகை பூவை
உன் கூந்தலில் சூட்டி
அழகுபார்ப்பேன் நான்
இப்பொழு என்
புகைப்படத்திற்க்கு சூட்டி
உன் கூந்தலை வாடவிட்டு
அழுதுபார்க்கிறாய் நீ.!
உன் தனிமையின் வேதனை எனக்குப் புரியும். ஆனால்
உன்னிடமிருந்து என்னை
பிரித்துவிட்ட இறைவனுக்கு
ஏனோ தெரியாமல்போனது.!?
இந்த பிறவியில்
நம்மை வாழவிடாமல்
பிரித்துவிட்ட விதியிடம்
நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
அடுத்தப்பிறவியிலாவது
எங்களை ஒன்றாக
வாழவிடு என்று...!

எழுதியவர் : Priyamudanpraba (2-Dec-12, 3:51 pm)
பார்வை : 285

மேலே