கவிக்கிழமை

ஞாயிற்றுக் கிழமை நியாயமாக நடந்தால்

திங்களில் திறமையாக இருந்தால்

செவ்வாய்க் கிழமை அன்று ;

செவ்வாயிலே போய் செழிப்பாக வாழலாம்

புதனில் புகழை சேர்த்து

'' வியாழனின் விழிப்புணர்வோடு''

வெள்ளிக் கிழமை அன்று ;

வெள்ளியிலே போய் வெற்றியாக வாழலாம்

சகல திறமையும் இல்லாதவன்

சனிக் கிழமை அன்று ;

சன்னியாசம் போய் விடுவான்

எழுதியவர் : கவிஞ்ர் வேதா - வே .தாமோதரன் (2-Dec-12, 8:48 pm)
சேர்த்தது : kavinghar vedha-v.dhamodharan
பார்வை : 127

மேலே