Abi Abi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Abi Abi
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  16-Oct-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Apr-2020
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Hi friends... இதில் எழுதும் அனைத்தும் என் கற்பனைகளே... இதுவரை எந்த புத்தகமும் படித்ததில்லை...சில நூல்களின் பெயர்களை எனக்கு கருத்தில் சொல்லுங்கள்.... and please support me friends கவிதையில் பிழை இருந்தாலும் என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள் நண்பர்களே...

என் படைப்புகள்
Abi Abi செய்திகள்
Abi Abi - எண்ணம் (public)
14-Apr-2020 10:06 am


     சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்




இனியது நடக்க.....
உடல்நலம் சிறக்க...
புன்னகை தொடர...
இன்னல்கள் குறைய...
மாற்றங்கள் நிகழ...
விவசாயம் செழிக்க..
மகிழ்ச்சிகள் நிலைக்க...
மனிதநேயம் வாழ....
அன்பு பெருக.....
தமிழ் வளர.....
ஏழ்மை குறைய...
நம்பிக்கைகள் தொடர...
வெற்றிகள் மலர...
வரவேற்கிறது புத்தாண்டு...
வாழிய பல்லாண்டு .....
அனைத்து நண்பர்களுக்கும் "இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"....

நம் உலகமே துன்பக் கடலில் மூழ்கிய இந்த நேரத்தில்...இந்த நன்னாளில்....  இறைவனிடம் உலக நலனிற்காக  பிரார்த்தனை செய்வோம்...

இந்த நன்னாளை நம் குடும்பத்துடன் இணைந்து அன்பு சூழ வரவேற்போம்...
                                          -Abi Abi ✒✌

மேலும்

Abi Abi - எண்ணம் (public)
11-Apr-2020 3:49 pm

என் அன்பு தோழி....


உணர்த்த முடியாத சில வலிகளையும் என் முகபாவனையில் அறிந்து கொள்ப(அ)வள்....

கவலைகள் சூழ்ந்த போது உடன்பிறந்த சகோதரி போல கட்டியணைக்கும் உடன்பிறவா சகோதரிய(அ)வள்...

எது செய்தாலும் பாராட்டி நான் உயர மனதார வாழ்த்தும் ஆசான(அ)வள்.....

சோகக்கடலில் மூழ்கும் போது மறு  அன்னையாய் மடியில் உறங்க வைத்தவள(அ)வள்....

நான் பிழைகள் செய்யும் பொழுது மறு தந்தையாய் அறிவுரை கூறுபவள(அ)வள்...

என் வாழ்க்கையில் வந்த சில போலி உறவுகள் மத்தியில் இறைவன் எனக்க(அ)ளித்த வரம(அ)வள்....

பலர் என்னை வேண்டாம் என்று ஒதுக்கிய போதிலும் என் கரம் பிடித்து கொண்ட என் உயிர் நட்ப(அ)வள்....

துவண்டு போகும் தருணங்களில் தன்னம்பிக்கை கொடுக்கும் இதயம் கொண்டவள(அ)வள்...

யாரிடமும் சொல்ல முடியாத ரகசியத்தை சொல்ல வைத்து விடும் தோழிய(அ)வள்....

என் வாழ்க்கையில் முதலில் கிடைத்த உண்மை நண்பன(அ)வள்....

துயரம் வரும் பொழுது அவள் மழலை மொழியில் அனைத்தையும் மறக்கடிக்க செய்யும் குழந்தைய(அ)வள்....

என் தேவதை அவள்.... என் தமிழ் அவள்....என் தமிழ் செல்வி அவள்....என் உயிர்  அவள்...என் குண்டச்சி அவள். ....😋என் வெள்ளச்சி அவள்😋...

விளக்கும் திரியும் ஒருபோதும் ஒன்றை ஒன்று  பிரியாதது  போல்.... அவள் மீது கொண்ட நட்பு எத்தனை சண்டைவந்தாலும் என் உயிர் இருக்கும் வரை பிரியாது...




        

மேலும்

Abi Abi - எண்ணம் (public)
09-Apr-2020 2:45 pm

                           


                   "அவன்"
                    *******
அவனை கண்ட போது   தெரியவில்லை  அவன் என்னுடைய பாதி என்று.....💞

(முழுக்கவிதை கீழே)
👇👇👇👇👇

கயல்களால்(கண்களால்) கதைப்பவன் அவன்....

வில்வளை போன்ற 
நாசியில் (மூக்கில்) என்
 மூச்சுக்காற்றை களவாண்டவன் அவன்......

கரும்பின் சுவையை 
ஒத்த அதரத்தால்(உதட்டால்)
என் மெல்லுடல்
சூட்டை  முத்த துளிகளால் தனிய வைத்தவன் அவன்......

கண்ணனின் கருமை வண்ணத்தை திருடி
 செய்தது  போல் உடலை கொண்டு..... என்னை 
கவர்ந்து இழுத்தவன் 
அவன்....


குன்றுபோல் உடற்கட்டை(உடலமைப்பை) வைத்து என்னை
 கட்டி இழுத்தவன்
 அவன்....

கரங்கள்(கைகள்)என்னும் வீட்டில் என்னை. அடைக்கலப்படுத்தியவன் அவன்......

நிழலைப் போல என்னை பின் தொடர்பவன் அவன்.....

இதய அரியணையில் அரசியாய்
என்னை அமர வைத்தவன் அவன்.....

இடர்(பிரச்சனை) வரும் போது
 வீரனாய் என்னை காத்தவன் அவன்...

கவலை கொஞ்சம்
 தழுவும் போது 
தாயாய் அரவணைத்தவன் அவன்.....

தவறுகள் செய்யும்
 போது தந்தையாய்
 அறிவுரை கூறியவன் அவன்......

விழிநீர்(கண்ணீர்)  வழியும்
 போது  நண்பனாய் 
துயர்(துயரம்)துடைத்தவன்
 அவன்.....

என் நெஞ்ச கருவூலத்தை கொள்ளையடித்த கள்வன் அவன்.....

உயிரில் கலந்த 
உதிரமாய் என்னுள் 
கலந்தவன் அவன்..."என்னவன்" 
அவன்...


காலம் கடந்தாலும்
 உன் மேல் வைத்த அன்பு....கடல் போல்
வற்றாது.... 

தாய் சேய்(பிள்ளை) பாசத்திற்கு 
அழிவதில்லாதது போல..... உன் மேல் நான் கொண்ட காதலும் அழியாது.... 

     இப்படிக்கு....
உன்னுடையவள்💞

   

மேலும்

Abi Abi - எண்ணம் (public)
08-Apr-2020 7:11 am

        நிலவின் மீது காதல் 

தொட முடியாத தொலைவில் நீ....

உன்னை விட முடியாத எண்ணத்தில் நான்....

      (முழுக்கவிதை  கீழே )

உன்னில் கிறுக்கனாய்மாறி கிறுக்கல்களை தொடங்கி விட்டேனடி...

அழகிய முகத்தின் பால் வண்ணம் கரை படியாதிருக்க முத்தக் கடலில் உன்னை  குளிக்க வைப்பேனடி.....

கயல்களில் கருமை மையை பூசிக்கொண்டு  என்னை மோகமடையச் செய்தாயடி....

சுயநலமில்லா  உன் இரவு மடியில் என்னை உறங்க வைத்தது ஏனடி....

எங்கு சென்றாலும்  நிழல் போல் வந்து பாவனை செய்தாயடி....

பௌர்ணமி அழகில் உன் மேல்  பித்துப் பிடிக்க வைத்தாயடி...

ஈசன் சடை முடியில்அமர்ந்து  என்னை பக்தி கடலில் மூழ்க  செய்தாயடி...

அமாவாசை நாளில்காதல் செய்யபோலியாய் அழைத்துவிட்டு இருட்டு என்னும் வீட்டில் அடைந்து கொண்டாயடி....

கார்மேகமான  உன் மேனியை  அங்கும் இங்கும் அசைத்து காமம் கொள்ளவைக்கிறாயடி....

உனக்குள்ளும் ஆயிரம் இடர்கள் இருப்பதை உன் கயல்களில் வடியும்  மழைத்துளிகள் புரிய வைத்ததடி....

உழைத்து களைத்து...வலியில் ஊரிப்போன என் மனதிற்கு உன் நட்சத்திரமான சிரிப்பு ஒரு சொர்க்கமடி.....

உன் நினைவுகள் என்னும் கொலுசுகள் என் உறக்கத்தை கெடுத்து செல்கிறதடி....

எத்தனை யுகம் எடுத்தாலும் உன் மேல் காதல் குறையப்போவதுமில்லையடி...நீ அழியப்போவதுமில்லையடி....

 பேரண்டம் என்னும் இதயத்தில் இந்தமூடனுக்கு ஒரு இடம் ஒதுக்கினால் போதுமடி...

ஞாயிரை சுற்றி வரும் கோள்களாய் வலம் வந்து உன்னைக் காப்பேனடி...

இந்த கவிஞனின் காதலையும் கொஞ்சம் கண்ணெடுத்து பாரடி... நிம்மதியாய் கண்ணுறங்குவேணடி....

       

                                 இப்படிக்கு...

                           நிலவின் ரசிகன் 

                                (Abi Abi)

        



மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே