Madhavan2013 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Madhavan2013
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-May-2013
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  18

என் படைப்புகள்
Madhavan2013 செய்திகள்
Madhavan2013 - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2014 1:38 am

அன்பு கொள்வோம் அனைவர் மீதும்..
ஆண்டவனின் குறிக்கோள் இதுவே...
நிறங்களுக்குள் பேதம் உண்டு ..
நம் நிழல்களுக்குள் எதுவும் இல்லை...
நினைவுகளில் மாற்றம் உண்டு,
கொள்ளும் கனவுகளில் எதுவும் உண்டு.....
உயிர் ஒன்றே என்ற எண்ணம் ,
எல்லோரோடும் என்றும் உண்டு..
அனைவரின் ரத்தம் சிவப்பு
வீழும் வியர்வையின் சுவை உவர்ப்பு,
அறிவாய் மனிதா இதை நீ ,
அன்பு கொள்வாய் அனைவர் மீதும்..............

மேலும்

மனித மாண்பு உணர்ந்த அழகிய கவிதை நன்று 24-Jul-2014 1:37 pm
சிந்தனை சிறப்பு நட்பே!! 24-Jul-2014 9:49 am
அற்புதமான சிந்தனை! எண்ணம் இன்னும் வளரட்டும்! எழுத்து இன்னும் சிறக்கட்டும்! 24-Jul-2014 9:47 am
Madhavan2013 - Madhavan2013 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2014 12:05 am

தொலைவினில் இல்லை வானம்....
அது நீ கூப்பிடும் தூரம்..
கனவுகள் சேர்..
நிஜப்படும் நினை..
மறக்காதே என்றும்
மனதே நீ,
நீயே மனது...

மேலும்

நன்றி தோழா.... 11-Jul-2014 10:53 am
நன்றி நட்பே .... 11-Jul-2014 10:52 am
அருமை நட்பே...... 11-Jul-2014 8:34 am
அருமை... 11-Jul-2014 1:40 am
Madhavan2013 - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2014 12:05 am

தொலைவினில் இல்லை வானம்....
அது நீ கூப்பிடும் தூரம்..
கனவுகள் சேர்..
நிஜப்படும் நினை..
மறக்காதே என்றும்
மனதே நீ,
நீயே மனது...

மேலும்

நன்றி தோழா.... 11-Jul-2014 10:53 am
நன்றி நட்பே .... 11-Jul-2014 10:52 am
அருமை நட்பே...... 11-Jul-2014 8:34 am
அருமை... 11-Jul-2014 1:40 am
Madhavan2013 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2014 11:57 pm

சமூகங்கள் இணைய வேண்டும்.
சாதிகள் மறக்க..
மதங்கள் மறுக்க..
எல்லோரும் உதிக்கின்றோம் கருவறையில்...
அடங்கிப்போகின்றோம் ஒரு கல்லறையில்..
இடையில் ஏன் இயங்குகின்றோம்
வீணான ஏற்றத்தாழ்வுகளில்...
மனிதா....நீ மாற வேண்டும்..
மதமும் சாதியும் இங்கு தீர வேண்டும்..
இயல்புகள் என்றும் வாழவேண்டும்...
மனிதங்கள் நாட்டில் உயர வேண்டும்...
இந்த மாண்புகள் பொங்கி பெருக வேண்டும்....................

மேலும்

Madhavan2013 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2014 11:23 pm

ஏன் இரவுகள் அழுதன புரியவில்லை
என் இமைகளும் ஏனோ மூடவில்லை
நான் உனக்குள்ளே தொலைந்தேனா தெரியவில்லை
உன் பூமுகம் இன்றும் மறக்கவில்லை .....
காதல் வந்த நொடி அறியவில்லை
நீ என்றும் என்னவள், உன்னை மறக்க முடியவில்லை...
நிலவும் பிரிந்தது நினைவில் இல்லை
காலை சூரியன் வந்தது கண்ணில் இல்லை....
உன்னோடு உறைந்து விட்டேன் வெண்ணிலவே ...
என் சரிபாதி நீ மட்டும் உணர்ந்து விட்டேன்..
தேகம் உன்னை தேடவில்லை இனியவளே...
உன் ஞாபகங்கள் ஓயவில்லை என்னவளே
விழி மூடி கண்ணீர் சுரக்கின்றேன்...
உன் நினைவுகளில் நாளெல்லாம் எனை மறக்கின்றேன்.......................................

மேலும்

Madhavan2013 - Madhavan2013 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2014 12:51 pm

வலிகள் சுமக்கின்றேன்
உலகம் மறக்கின்றேன்
குரங்கு தாவும் கிளைகள் போல
மாறி மாறி பயணம் சென்று
மீண்டும் இந்த உலகில் வந்து
மீளாத மாளாத வலிகள் சுமக்கின்றேன்
நேசமெல்லாம் பாசமெல்லாம்
வீழ்ந்து போன மானுடத்தில்
வாழ வழியின்றி வான் போக வகையின்றி
வலிகள் சுமக்கின்றேன் ....
காதலும் நட்பும் இன்று
கலப்படமாய் போனதிங்கே,
கனவுகள் சுமந்து சுமந்து
கழுத்து எலும்பும் தேய்ந்ததிங்கே,
நல்வழி காட்டி நம்மை
நலம் பெற செய்ய இங்கு
நான்கு பேர் கூட இல்லை
நானிலம் எழுச்சியுற
நன்மைகள் நடக்கவில்லை
கடவுளே இங்கு வாரும்
கருணையின் எல்லை காட்டும்
கவலைகள் அகன்று , பூமி
களிப்புற வழிகள் தாரும் ...............

மேலும்

நன்றி... 01-Jun-2014 10:15 pm
நன்றி... 01-Jun-2014 10:15 pm
நன்றி தோழா ...... 01-Jun-2014 10:15 pm
நன்றி 01-Jun-2014 10:14 pm
மேலும்...
கருத்துகள்

மேலே