என் சகியே
ஏன் இரவுகள் அழுதன புரியவில்லை
என் இமைகளும் ஏனோ மூடவில்லை
நான் உனக்குள்ளே தொலைந்தேனா தெரியவில்லை
உன் பூமுகம் இன்றும் மறக்கவில்லை .....
காதல் வந்த நொடி அறியவில்லை
நீ என்றும் என்னவள், உன்னை மறக்க முடியவில்லை...
நிலவும் பிரிந்தது நினைவில் இல்லை
காலை சூரியன் வந்தது கண்ணில் இல்லை....
உன்னோடு உறைந்து விட்டேன் வெண்ணிலவே ...
என் சரிபாதி நீ மட்டும் உணர்ந்து விட்டேன்..
தேகம் உன்னை தேடவில்லை இனியவளே...
உன் ஞாபகங்கள் ஓயவில்லை என்னவளே
விழி மூடி கண்ணீர் சுரக்கின்றேன்...
உன் நினைவுகளில் நாளெல்லாம் எனை மறக்கின்றேன்.......................................