வலிகள் சுமக்கின்றேன்

வலிகள் சுமக்கின்றேன்
உலகம் மறக்கின்றேன்
குரங்கு தாவும் கிளைகள் போல
மாறி மாறி பயணம் சென்று
மீண்டும் இந்த உலகில் வந்து
மீளாத மாளாத வலிகள் சுமக்கின்றேன்
நேசமெல்லாம் பாசமெல்லாம்
வீழ்ந்து போன மானுடத்தில்
வாழ வழியின்றி வான் போக வகையின்றி
வலிகள் சுமக்கின்றேன் ....
காதலும் நட்பும் இன்று
கலப்படமாய் போனதிங்கே,
கனவுகள் சுமந்து சுமந்து
கழுத்து எலும்பும் தேய்ந்ததிங்கே,
நல்வழி காட்டி நம்மை
நலம் பெற செய்ய இங்கு
நான்கு பேர் கூட இல்லை
நானிலம் எழுச்சியுற
நன்மைகள் நடக்கவில்லை
கடவுளே இங்கு வாரும்
கருணையின் எல்லை காட்டும்
கவலைகள் அகன்று , பூமி
களிப்புற வழிகள் தாரும் ...............

எழுதியவர் : இர.மாதவன் (1-Jun-14, 12:51 pm)
Tanglish : valikal sumakkinren
பார்வை : 118

மேலே