Meenal Manikantan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Meenal Manikantan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 5 |
பொருள் திருடுபவன் மட்டுமா களவாணி? காரியங்களை மறைத்துச் செய்பவன், செய்திகளை சொல்லாமல் மறைப்பவன் கூட களவாணியில் சேர்ந்தவனே! நான் கண்ட களவாணியை பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.
தினமும், நான்கு அல்லது நாலரை மணிக்கு எழுந்து என் கணவன் குழந்தைகளுக்கு உணவு சமைத்து சூடு தாங்கும் பாத்திரங்களில் வைத்து கட்டிக் கொடுப்பேன். அதனுடன், பேரிச்சம்பழம் அத்திபழம் கலந்த பால், சிலசமயம் சில பழவகைகள் நறுக்கி வைப்பேன், சில நாட்கள் நீர் மோர் கலந்து வைப்பேன். இவை அன்றாடம் இன்றி அவ்வப்போது மட்டும் தருவதற்குக் காரணம், அவை பாதி நாள் திரும்பி வந்து குப்பைத்தொட்டியைத் தழுவுவதாலேயே! இருப்பினும் மனம் கேட்பதில்லை, கட்டுவேன், உண்ட
பொருள் திருடுபவன் மட்டுமா களவாணி? காரியங்களை மறைத்துச் செய்பவன், செய்திகளை சொல்லாமல் மறைப்பவன் கூட களவாணியில் சேர்ந்தவனே! நான் கண்ட களவாணியை பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.
தினமும், நான்கு அல்லது நாலரை மணிக்கு எழுந்து என் கணவன் குழந்தைகளுக்கு உணவு சமைத்து சூடு தாங்கும் பாத்திரங்களில் வைத்து கட்டிக் கொடுப்பேன். அதனுடன், பேரிச்சம்பழம் அத்திபழம் கலந்த பால், சிலசமயம் சில பழவகைகள் நறுக்கி வைப்பேன், சில நாட்கள் நீர் மோர் கலந்து வைப்பேன். இவை அன்றாடம் இன்றி அவ்வப்போது மட்டும் தருவதற்குக் காரணம், அவை பாதி நாள் திரும்பி வந்து குப்பைத்தொட்டியைத் தழுவுவதாலேயே! இருப்பினும் மனம் கேட்பதில்லை, கட்டுவேன், உண்ட
புயல் வந்து ஓய்ந்தது
புகட்டிய பாடம் பதிகிறது
நானென்ற எண்ணம் மாறி
நாமெனும் சிந்தனை ஓங்குகிறது
'இந்த நிலை மாறும்'
இதுவே இன்றைய மந்திரம்
பொறுமை அதன் சொல்லின்
பொருள் உணரும் தருணம்
வரண்டு நிலம் வாடக் கண்டு
வருணன் வந்து கொட்டினான்
வந்தவரைத் தங்க வைக்கும்
வழியற்றுப் போனோம் நாம்
வீரம் குறைந்தவர் இல்லை
வீடு வாசல் இழந்தாலும்
நீரிலிருந்து எழும்பி நாமும்
நீண்ட பயணம் தொடர்வோம்
மீண்டும் நிமிர்ந்து எழுந்திட
மீனாய்த் துளிர்த்து உயிர்த்திட
மட்சயனாய் வந்த பரமன்
மண்ணில் தோன்றியே காக்க.
கவிதை மொழியாத நாள்
காலியாய்த் தோன்றுதே,
கடைந்து எடுக்க எடுக்க
கடல் தந்ததே முத்தாரம்
விட்டுப் பிரிய வேதனை
விடுப்பில் பிரிந்த தோழி போல்
விடிய விடிய சொற்கோலம்
விரித்து வரைய ஆசையே.
உரம் இட்டிட மலர்ச்செடி
நிறம் நிறமாய்ப் பூக்குமே
நேரம் என்னைத் துரத்த
ஆரம் கட்ட காலமில்லை
வெறும் சட்டியில் தீயிட
கருகும் அடி வெறுமனே
பருப்பு, காயுடன் நீரிட
மணக்கும் சாம்பார் இழுக்குமே
உதிக்கும் சொல் உள்ளிருந்து
உருவம் தரக் கவிதையில்
சிரிக்கும் மனம் நிம்மதியில்
வெளிச்சம் இட்ட வார்த்தையில்.
திருமண பந்தம் ஏற்க
திடமாய்க் கிளம்பிய பெண்ணே
வாழ்வு சிறந்து செழிக்கும்
வாழ்த்துகிறேன் அண்ணி உன்னை.
இடர் போல் தோன்றும் மேகம்
இடம் விட்டு நிற்கும் சூரியனுக்கே
உள்ளம் தன்னில் ஊக்கம் கொண்டு
உயர்ந்திடு உற்ற துணையுடனே!
வீரம் என்ன அறிந்தாய் இளமையில்
வீறு கொண்டு வாழ்ந்து காட்டு
விட்டுக் கொடுத்தல் வீரம் என்றும்
விலை அற்றது அன்பு என்றும்!
கடலைப் போலே மொழியாம்
கடையக் கூடத் தேவையில்லை
தொட்ட தெல்லாம் சொல்லாம்
தொகுக்க நாமே தயாரா?
பொருள் கேட்டு நிற்காது
பொருள் பொதிந்து பொங்கிடும்
அள்ளும் ஆர்வம் நமக்கிருந்தால்
அளவின்றி உவந்து தரும்
ஒவ்வொரு துளியும் நம்முடன்
ஒளிந்து ஆடும் ஆட்டம்
பிடித்து நாமும் கையாள
பிடித்துப் போய்விடும் நமக்கது
திருமண பந்தம் ஏற்க
திடமாய்க் கிளம்பிய பெண்ணே
வாழ்வு சிறந்து செழிக்கும்
வாழ்த்துகிறேன் அண்ணி உன்னை.
இடர் போல் தோன்றும் மேகம்
இடம் விட்டு நிற்கும் சூரியனுக்கே
உள்ளம் தன்னில் ஊக்கம் கொண்டு
உயர்ந்திடு உற்ற துணையுடனே!
வீரம் என்ன அறிந்தாய் இளமையில்
வீறு கொண்டு வாழ்ந்து காட்டு
விட்டுக் கொடுத்தல் வீரம் என்றும்
விலை அற்றது அன்பு என்றும்!
கவிதை மொழியாத நாள்
காலியாய்த் தோன்றுதே,
கடைந்து எடுக்க எடுக்க
கடல் தந்ததே முத்தாரம்
விட்டுப் பிரிய வேதனை
விடுப்பில் பிரிந்த தோழி போல்
விடிய விடிய சொற்கோலம்
விரித்து வரைய ஆசையே.
உரம் இட்டிட மலர்ச்செடி
நிறம் நிறமாய்ப் பூக்குமே
நேரம் என்னைத் துரத்த
ஆரம் கட்ட காலமில்லை
வெறும் சட்டியில் தீயிட
கருகும் அடி வெறுமனே
பருப்பு, காயுடன் நீரிட
மணக்கும் சாம்பார் இழுக்குமே
உதிக்கும் சொல் உள்ளிருந்து
உருவம் தரக் கவிதையில்
சிரிக்கும் மனம் நிம்மதியில்
வெளிச்சம் இட்ட வார்த்தையில்.