கவிதை மொழியாத நாள்

கவிதை மொழியாத நாள்
காலியாய்த் தோன்றுதே,
கடைந்து எடுக்க எடுக்க
கடல் தந்ததே முத்தாரம்

விட்டுப் பிரிய வேதனை
விடுப்பில் பிரிந்த தோழி போல்
விடிய விடிய சொற்கோலம்
விரித்து வரைய ஆசையே.

உரம் இட்டிட மலர்ச்செடி
நிறம் நிறமாய்ப் பூக்குமே
நேரம் என்னைத் துரத்த
ஆரம் கட்ட காலமில்லை

வெறும் சட்டியில் தீயிட
கருகும் அடி வெறுமனே
பருப்பு, காயுடன் நீரிட
மணக்கும் சாம்பார் இழுக்குமே

உதிக்கும் சொல் உள்ளிருந்து
உருவம் தரக் கவிதையில்
சிரிக்கும் மனம் நிம்மதியில்
வெளிச்சம் இட்ட வார்த்தையில்.

எழுதியவர் : (10-Dec-15, 8:12 pm)
சேர்த்தது : Meenal Manikantan
பார்வை : 59

மேலே