நடராஜன் அச்சுமல்லையன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நடராஜன் அச்சுமல்லையன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  24-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2018
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  11

என்னைப் பற்றி...

சமூக நல கவிஞர்

என் படைப்புகள்
நடராஜன் அச்சுமல்லையன் செய்திகள்

வானத்தில் மலரும்
வண்ணப்பூக்களை
வார்க்கும் வர்க்கம்!
ஓர் நாள் ஒளிக்க...
ஓராண்டு உழைப்பு...
ஆபத்தின் ஆழமதை அறியாமல் அல்ல!
ஆசைமகன் நாளெழுத்தை அறியவே!!
அலுமினியம் நிறைந்த கைகள்...
அன்பு மகன் வயிறு நிறையவே!
வெடி மருந்துகளோடு வாழ்க்கை...
திருநாளில் ஒளிரும் வெடியோ! அங்கே
திணையளவு ஒளிர்ந்தால்...
ஆலையோரம் ஆலமரக்கிளை...
தொட்டிலில் தூங்கு மகனே!
ஓடுகிறேன் உன்தாய்-ஆலை மணி
ஓசைக்கேட்டு-பனை
ஓலைவெடி மடிப்பேன்! பள்ளி
சாலை நீ ஓடிடவே!!
கல்லூரி காலம் காண
கைசிவக்க கம்பியில்
கந்தக மருந்திடுவேன்!
பட்டங்களை நீ சுமக்க...
பட்டாசு சுமந்து திரிவேன்!
உயிரை வைத்து உழைக்கிறேன்! என்
உயிரான நீ பிழைக்கவ

மேலும்

நன்றிகள் தோழி! எழுதுவோம்... எண்ணங்களால் பட்டம் செய்து மொழியெனும் கயிறு கொண்டு கற்பனையெனும் வானமதில் கவிதையென பறப்போம்! 26-Sep-2018 10:38 pm
உண்மையில் உணர்வை கொஞ்சம் தீண்டி செல்கிறது உங்கள் வார்த்தைகளும் பட்டாசு தொழிலாளியின் வாழ்க்கையும், வழிகளை சொற்களாய் மொழிபெயர்க்க சிலரால் மட்டுமே முடியும் அதில் நீங்களும் ஒருவரென இந்த கவிதை உணர்த்துகிறது. உங்கள் எழுத்து இன்னும் மிளிர என் வாழ்த்துக்கள். 26-Sep-2018 10:17 am
நடராஜன் அச்சுமல்லையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2018 11:50 pm

முத்தமிழ் வணங்கி-கவி முரசு கொட்டி முழங்குகிறேன்... இலக்கியத்தில் இளமைக்கண்டு இலக்கண வளமும் கண்டு... இந்தியத்தாயின் பாதமென இருக்குமிந்த இனிய தமிழ் நாடுதனிலே... திருக்குவளை தந்த தமிழ் நிரம்பிய மனிதக் குவளை! பாடுகிறேன் உம் புகழை!! அஞ்சுகம் அளித்தாள் அன்றோ கொடையென அன்னைத் தமிழுக்கு... எண்ணங்களை எழுத்துக்களால் வண்ணமிட்டு வரையப்பட்ட கவியோடு... நாடகத்தை நேசித்தாய்... நற்றமிழிலையே பூசித்தாய்... அழகிரி சாமியின் அக்குரலோ அரசியல் உம்மை அழைக்கவே! அனைத்து மாணவர் அமைப்பு அமைத்தாய்... மூச்சில் கலந்த முத்தமிழை முரசொலியென பாய்ச்சினாய்... கள்ளக்குடி பெயர்மாற்றம்... கம்பீரமென உயர்ந்த உம் பெயர் ஏற்றம்... அண்ணா

மேலும்

நடராஜன் அச்சுமல்லையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2018 11:41 pm

முத்தமிழ் வணங்கி-கவி
முரசு கொட்டி முழங்குகிறேன்... இலக்கியத்தில் இளமைக்கண்டு இலக்கண வளமும் கண்டு... இந்தியத்தாயின் பாதமென இருக்குமிந்த இனிய தமிழ் நாடுதனிலே... திருக்குவளை தந்த தமிழ் நிரம்பிய மனிதக் குவளை! பாடுகிறேன் உம் புகழை!! அஞ்சுகம் அளித்தாள் அன்றோ கொடையென அன்னைத் தமிழுக்கு... எண்ணங்களை எழுத்துக்களால் வண்ணமிட்டு வரையப்பட்ட கவியோடு... நாடகத்தை நேசித்தாய்... நற்றமிழிலையே பூசித்தாய்... அழகிரி சாமியின் அக்குரலோ அரசியல் உம்மை அழைக்கவே! அனைத்து மாணவர் அமைப்பு அமைத்தாய்... மூச்சில் கலந்த முத்தமிழை முரசொலியென பாய்ச்சினாய்... கள்ளக்குடி பெயர்மாற்றம்... கம்பீரமென உயர்ந்த உம் பெயர் ஏற்றம்... அண்

மேலும்

நடராஜன் அச்சுமல்லையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2018 11:33 pm

முக்கடல் முப்புறம் சூழ-பனி
மூடிய மலைகளும்...
பசுமை வெளிகளும்...
பாலை வனங்களும்...
சோலை நிலங்களுமென...
பன்மொழி மக்களைக்கொண்டு-உயர்
பண்பாட்டில் தலைத்து
பாருக்குள்ளே நல்ல நாடென
பாரதி பாடிய பாரதநாட்டின்...
பெருமைக்குரிய பேரரசியே!
பாரத தாயே!!
நெற்கட்டு செவ்வலில் விடுதலையெனும்
நீதிகேட்ட பூலித்தேவன் குரலும்...
பாடியே பாரதத்திற்கு
விடுதலை வினவிய பாரதியும்...
இளமைக்காலமுழுதும் செக்கை
இழுத்துக்கழித்த சிதம்பரனாரும்...
மங்கா வீரமுடைய மருதிருவரும்...
பொங்கியெழுந்து போர்வென்று-தலை
தொங்கும் கயிற்றுக்கு முத்தமிட்ட
கட்டபொம்மனும்-கையில் வேலுடன்
நாட்டைக் காக்க வாழ்நாளை போக்கிய
தீரனும்...

மேலும்

நடராஜன் அச்சுமல்லையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2018 11:28 pm

ஏழையின்வாழ்வின்
ஏற்றத்தின் ஏணி கல்வி-அதை
மூலதனமாக்கப்பட்ட முயற்சி!!
முறைப்படுத்தப்பட்ட பயற்சி!!!
கல்வியெனும் காகிதப்பட்டம்
காரிருளென சூழ்ந்த
வறுமை வானத்தில்
அநீதியால் அறுக்கப்பட்டக்கொடுமை!
மருத்துவம் சேர
மதிப்பெண் சேர்த்தாய்...அநீதியால்
மதிப்பற்ற பெண்ணென எண்ணி
வழக்கில் உச்சம் கண்ட
வாழ்க்கைப்போராளி!
சாதி,மதம் கடந்த
சகோதரியாய் சரித்திரம் படைத்தாய்!
மரணம் கண்ட உமக்கு
மக்கள் கொடுத்த மருத்துவர் பட்டம்!!
மனத்திடம் உடைத்த
மறுக்கப்பட்ட நீதி!
போர்க்குணம் கொண்ட நீதிக்குரல்!
அர்பணமே அநீதிக்கு எதிர்!!

மேலும்

எண்ணமெனும் வண்ணத்தை
என்னவள் தெளித்தால் என்மனதில்!
எழுத்துக்கள் கொண்டு ஓவியம் தீட்ட
எடுத்தேன் காகிதத்தை!
கண்களால் கடிதம் வரைந்து...
மௌனத்தால் பாடிய இசை!
அவளின் ரசிகன்
அவளால் கவிஞன்!
ஆதலால் காதலன் மொழிக்கு!
எண்ணத்தை கவிதையாக்க
திண்ணமென நெஞ்சம் கொண்டு
தண்ணென்ற குணம் வேண்டினேன்
ஆர்ப்பரித்த ஆதவன் போன்ற
ஆசைகளை அழகாய் அடுக்கிட!
எதுகையும் மோனையும் இல்லை...
என்னவளின் எண்ணம் மட்டுமே!
முதல் கவிதையும் முளைத்தது
முழுமதியேற்ற வானம் போல்
காகிதத்தில்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே