முதற் கவிதை

எண்ணமெனும் வண்ணத்தை
என்னவள் தெளித்தால் என்மனதில்!
எழுத்துக்கள் கொண்டு ஓவியம் தீட்ட
எடுத்தேன் காகிதத்தை!
கண்களால் கடிதம் வரைந்து...
மௌனத்தால் பாடிய இசை!
அவளின் ரசிகன்
அவளால் கவிஞன்!
ஆதலால் காதலன் மொழிக்கு!
எண்ணத்தை கவிதையாக்க
திண்ணமென நெஞ்சம் கொண்டு
தண்ணென்ற குணம் வேண்டினேன்
ஆர்ப்பரித்த ஆதவன் போன்ற
ஆசைகளை அழகாய் அடுக்கிட!
எதுகையும் மோனையும் இல்லை...
என்னவளின் எண்ணம் மட்டுமே!
முதல் கவிதையும் முளைத்தது
முழுமதியேற்ற வானம் போல்
காகிதத்தில்...

எழுதியவர் : நடராஜன் அச்சுமல்லையன் (24-Sep-18, 11:47 pm)
Tanglish : muthar kavithai
பார்வை : 448

மேலே