என் காதல் உன் விழிகளை நம்பி

உயிரற்ற வைக்கோல் கன்றுக்குட்டியை
பாசத்துடன் முகர்ந்து
தன் நாவால் வருடி வருடி அதற்கு
பால் சுரக்கும் பசுவைப்போல்
உன் விழிகள் பொய்சொல்லாது
என நம்பி என் காதல்
உனைச்சுற்றியே வருகிறது....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Sep-18, 9:09 pm)
பார்வை : 296

மேலே