எப்பொழுதும் இனிமை வா சிக்க
வாசிக்க இனிமை எப்பொழுதும்...
காமதேவன்
புத்தகத்தில்
பக்கங்கள்
எத்தனையோ
வாசிக்க ஓய்வதில்லை
வாசகங்கள்
அவ்வாறு
திரும்ப திரும்ப
விரும்பி
செய்யும்
வித்தைகள் அத்துபடி
மன்மத மந்திரம்
கற்கவில்லை எனும் போதும்
தருணத்தில் தவழ்ந்திடும்
தடையேதும் இல்லாது
முதல் பாடம் முத்தத்தில்
சத்தமே இல்லாது
அரங்கேறும் பட்சத்தில்
கண்கள்
தழுவிடுமே மெய்கள்
கூடும் முன்னே
ஆசைக்கு
தடையேது விருந்துக்கு
இலைபோட
இருந்தாலும்
இசைவு பிறந்தாலன்றி
இனிமை கிடைத்திடுமா
முந்திவிட
துடிக்கும் மனசு
தொட்டு விளையாட
தயக்கம் எதற்கு
நீயா நானா
கேள்விகள் பிறக்கும்
முதலில் பெண் என்ற
வாசகம்
இதில் மட்டும் பொய்க்கும்
கலாச்சாரம் காக்க...
ஆணின் கைகள் பூ பறிக்க
மென்மையானவள்
பெண்.... அல்லவோ...!!!!